கர்நாடகாவில் இன்று 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. சில மாநிலங்களில் அவ்வப்போது திறக்கப்பட்டாலும், மீண்டும் கொரோனா வைரஸ் அதிகம் பரவத் தொடங்கியதும் பள்ளிகள் மூடப்பட்டு வந்தது. இந்நிலையில் கர்நாடகாவில் தற்போது 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், கல்லூரிகளும் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் தெரிவிக்கையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த அமைச்சர்கள் நேரில் சென்று பள்ளிகளை பார்வையிட வலியுறுத்தி உள்ளதாகவும், மாணவர்கள் முறையான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்ற பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மல்லேஸ்வரத்தில் உள்ள நிர்மலராணி மேல்நிலைப்பள்ளியை இன்று நேரில் சென்று முதல்வர் பசவராஜ் அவர்கள் பார்வையிட்டு உள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…