சிறுமியை வன்கொடுமை செய்த பள்ளி துப்புரவுத் தொழிலாளி கைது!

Default Image

தெற்கு டெல்லியில் ஒரு தனியார் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் துப்புரவு தொழிலாளி ஒருவர் அங்கு  உள்ள சில குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தெற்கு டெல்லி இணை ஆணையர் விஜயகுமார் கூறுகையில் , அப்பள்ளியில் படித்த பெண் குழந்தை தன் தாயிடம் வயிற்று வலி என கூறியுள்ளார்.

உடனடியாக அக்குழந்தையை  மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது.  இது தொடர்பாக அக்குழந்தை தாய் புகார் கொடுத்தார். பின்னர் அக்குழந்தைக்கு கவுன்சிலிங் கொடுத்தபோது அப்பள்ளியில் துப்புரவு தொழிலாளி ஒருவர் பலமுறை பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

Image result for சிறுமியை வன்கொடுமை

இதை அடுத்து அந்த தொழிலாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளோம் என கூறினார். மேலும் அப்பள்ளியில் படிக்கும்  மற்ற  குழந்தைகளுக்கு கவுன்சிலின் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் சில குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

பள்ளி  சிசிடிவி கேமராவில் அவர் பெண்கள் கழிவறையில் சென்றது பதிவாகியுள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம்  விளக்கம் கேட்டுள்ளோம் என கூறினார். அந்த துப்புரவு தொழிலாளி கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வேலை செய்து வருகிறார்.

Image result for சிறுமியை வன்கொடுமை

அவருக்கு திருமணமாகி மூன்று பெண்குழந்தை , ஒரு ஆண் குழந்தைஉள்ளது. பள்ளி அருகில் அவரது வீடு உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்