Categories: இந்தியா

வாகனங்கள் மீது வேகமாக மோதி சென்ற பள்ளிப்பேருந்து !வைரலாகும் வீடியோ!

Published by
அகில் R

ஹரியானா : ஹரியானாவில் உள்ள ஹிசாரில் பலரும் பயணிக்கும் ஒரு முக்கிய சாலையில் மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹிசாரில் உள்ள தனியார் பள்ளியான தில்லி பப்ளிக் பள்ளியிலிருந்து 40 மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து ஒன்று கடந்த ஜூலை-04 ம் தேதி வியாழன்று ஹிசாரில் உள்ள மேயர் கிராமம் அருகே வேகமாக வந்து கொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த பள்ளிப்பேருந்து அங்கு நின்று கொண்டிருந்த பைக் உட்பட பல வாகனங்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் பைக்கில் சென்ற அந்த நபர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதே நேரத்தில் பேருந்தில் இருந்த மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸ் செய்தித் தொடர்பாளர் விகாஸ் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த விபத்தின் முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டி வந்த ஓட்டுநர் பிரேக் செயலிழந்ததால் தான் இப்படி பல வாகனங்களில் மோதியதாக தெரியவந்துள்ளது. அதே நேரம் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த 40 மாணவர்களும், பேருந்து மோதிய காரில் இருந்த 2 பெண்கள் காயமின்றி உயிர் தப்பியுள்ளார். இந்த விபத்து நடந்தவுடன் அருகில் இருந்த கும்பல் ஆத்திரமடைந்து அந்த பேருந்து ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக கருதி அவரைத் தாக்கி உள்ளனர்.

அதை தொடர்ந்து அந்த பள்ளி முதலைவரான மஞ்சு பாலா கூறுகையில், ஓட்டுநர் நிதானமாக இருந்ததாகவும், விபத்து குறித்து புகாரளிக்க தன்னை அழைத்ததாகவும் கூறினார். பின் சம்பவ இடத்திற்கு ஊழியர்களுடன் விரைந்து வந்த பள்ளி முதல்வர் காயம் ஏற்பட்ட அந்த பைக் ஓட்டுநரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் பார்ப்போரின் நெஞ்சை உலுக்குவதுடன் ஒரு வித பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி பரவி வருகிறது.

Published by
அகில் R

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

5 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

6 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

7 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

9 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

10 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

10 hours ago