கெஜ்ரிவாலின் 7 நாட்கள் ஜாமீன் நீட்டிப்பு கோரிக்கை..! கைவிரித்த உச்சநீதிமன்றம்.!

Published by
மணிகண்டன்

டெல்லி: ஜூன் 1 வரையில் வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை 7 நாட்கள் நீட்டிக்க கோரிய கெஜ்ரிவால் மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பு வழக்கு தொடர்ந்து இருந்தது.

இந்த, வழக்கு விசாரணையின்போது, கடந்த மே 10ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 21 நாள் ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கோடை விடுமுறையை குறிப்பிட்டு இந்த இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதாக உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு குறிப்பிட்டு இருந்தது. மேலும் ஜூன் 2ஆம் தேதி திகார் சிறையில் சரணடைய வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டது.

இதனை அடுத்து கடந்த வாரம், உச்சநீதிமன்றத்தில் புதிய மனுவை கெஜ்ரிவால் தரப்பு தாக்கல் செய்தது. அதில், தனது மருத்துவ காரணங்களை குறிப்பிட்டு இடைக்கால ஜமீனை மேலும் 7நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்றும் ஜூன் 9ஆம் தேதி சிறை அதிகாரிகளிடம் சரணடைவதாகவும் குறிப்பிட்டார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை விசாரித்த, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு கோரிக்கையை அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனவும், கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு கோடை விடுமுறைக்கு பின்னர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும், இந்த கோரிக்கையை தலைமை நீதிபதி அமர்வுக்கு அனுப்புமாறும் கூறி கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்துள்ளது உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு.

Published by
மணிகண்டன்

Recent Posts

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

5 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

6 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

7 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

8 hours ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கேப்டன் பொறுப்பை தூக்கி ரஹானேயிடம் கொடுத்த கொல்கத்தா!

கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…

8 hours ago

நாகை மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்..!

நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…

10 hours ago