மண்ணில் புதைந்த மக்களையும் விரைந்து காப்பாற்றுங்கள் – கேரள அரசுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்!

Published by
Rebekal

விமான விபத்தை சிறப்பாக கையாண்ட கேரள அரசு, நிலச்சரிவில் சிக்கிய மக்களையும் விரைந்து காப்பாற்றுங்கள் என கவிஞர் வைரமுத்து அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரானா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருந்த இந்திய மக்கள் தாயகம் திரும்புவதற்கு முடியாத சூழ்நிலையில் இருந்தபோது, வந்தே பாரத் எனும் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு கொண்டிருந்தனர். இதில், கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் இருந்து 10 குழந்தைகள் உட்பட 185 இந்தியர்களுடன் கூடிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தை அடைந்த போது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தால் விமானம் இரண்டாகப் பிளந்து பேரிழப்பு ஏற்பட்டது.

இதில் 2 விமானிகள் உள்பட 197 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விமானம் விபத்தில் சிக்கி இறந்தவர்களை மீட்டு, விபத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில்கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் பெட்டி மூடி எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு மண்சரிவு ஏற்பட்டது. அங்கு வாசித்த 85 க்கு மேற்பட்ட குடிசைகள் நிலச்சரிவில் புதையுண்டது. இதில் 26 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு வேலை செய்து வந்தவர்கள் எத்தனை பேர் என்பதை அடிப்படையாகக் கொண்டு, தேடுதல் பணியும் நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் முழுமையாக பணிகள் முடிவடையவில்லை.

இந்நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, விமான விபத்தை திறமையாக கையாண்டு முடித்துள்ள கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் அரசாட்சி பாராட்டுக்குரியது. அதேபோல தேயிலை தோட்ட நிலச்சரிவில் மண்ணில் புதைந்த மக்களையும் விரைந்து மீட்டு தகுந்த பாதுகாப்பும் வழங்க வேண்டும் என கேரள அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கவிதை ஒன்று எழுதியுள்ளார். “வான் வழி வந்தோர் மேன் மக்கள் அல்லர், மன்வழி சென்றோர் கீழ் மக்கள் அல்லர் என்பது பொது உடமை, இது பூமிக்கு புரியாதா என்ன? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். இதோ அவரது பதிவு,

Published by
Rebekal

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

2 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

15 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

20 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

20 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

20 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

20 hours ago