மண்ணில் புதைந்த மக்களையும் விரைந்து காப்பாற்றுங்கள் – கேரள அரசுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்!

Published by
Rebekal

விமான விபத்தை சிறப்பாக கையாண்ட கேரள அரசு, நிலச்சரிவில் சிக்கிய மக்களையும் விரைந்து காப்பாற்றுங்கள் என கவிஞர் வைரமுத்து அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரானா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருந்த இந்திய மக்கள் தாயகம் திரும்புவதற்கு முடியாத சூழ்நிலையில் இருந்தபோது, வந்தே பாரத் எனும் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு கொண்டிருந்தனர். இதில், கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் இருந்து 10 குழந்தைகள் உட்பட 185 இந்தியர்களுடன் கூடிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தை அடைந்த போது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தால் விமானம் இரண்டாகப் பிளந்து பேரிழப்பு ஏற்பட்டது.

இதில் 2 விமானிகள் உள்பட 197 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விமானம் விபத்தில் சிக்கி இறந்தவர்களை மீட்டு, விபத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில்கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டம் பெட்டி மூடி எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு மண்சரிவு ஏற்பட்டது. அங்கு வாசித்த 85 க்கு மேற்பட்ட குடிசைகள் நிலச்சரிவில் புதையுண்டது. இதில் 26 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு வேலை செய்து வந்தவர்கள் எத்தனை பேர் என்பதை அடிப்படையாகக் கொண்டு, தேடுதல் பணியும் நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னும் முழுமையாக பணிகள் முடிவடையவில்லை.

இந்நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, விமான விபத்தை திறமையாக கையாண்டு முடித்துள்ள கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் அரசாட்சி பாராட்டுக்குரியது. அதேபோல தேயிலை தோட்ட நிலச்சரிவில் மண்ணில் புதைந்த மக்களையும் விரைந்து மீட்டு தகுந்த பாதுகாப்பும் வழங்க வேண்டும் என கேரள அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கவிதை ஒன்று எழுதியுள்ளார். “வான் வழி வந்தோர் மேன் மக்கள் அல்லர், மன்வழி சென்றோர் கீழ் மக்கள் அல்லர் என்பது பொது உடமை, இது பூமிக்கு புரியாதா என்ன? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். இதோ அவரது பதிவு,

Published by
Rebekal

Recent Posts

பாஜக கூட்டத்தில் அடுத்தடுத்த டிவிஸ்ட்., பேனர் மாற்றம்! நயினார் நாகேந்திரன் புகைப்படம்!

பாஜக கூட்டத்தில் அடுத்தடுத்த டிவிஸ்ட்., பேனர் மாற்றம்! நயினார் நாகேந்திரன் புகைப்படம்!

சென்னை : அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகளுடன் பாஜக அரசியல் களம் நகர்ந்து வருகிறது. மத்திய அமைச்சரும் , பாஜக தேசிய…

15 minutes ago

”டாக்சிக் மக்களே… இது தான் பெயரில்லா கோழைத்தனம்” – த்ரிஷாவின் காட்டமான பதிவு.!

சென்னை : அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை த்ரிஷா, இப்படம்…

52 minutes ago

பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்படுமா? மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை!

சென்னை :  திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு உடலுறவு குறித்து மறைமுகமாக…

55 minutes ago

“நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்.,” அமைச்சர் துரைமுருகன் பகிரங்க வருத்தம்!

சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…

3 hours ago

அமைச்சர் பொன்முடி பதவியில் திருச்சி சிவா! மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு!

சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…

3 hours ago

தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…

3 hours ago