குடியுரிமை திருத்தச்சட்டம் ..!மிகவும் வருத்தமாக உள்ளது -மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ கருத்து

Published by
Venu
  • குடியுரிமை திருத்த சட்டம்  அண்மையில்  கொண்டுவரப்பட்டது.
  • இது குறித்து மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா கருத்து தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் பிறந்த சத்ய நாதெள்ளா, மணிப்பால் பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்புப் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றவர் ஆவார். சத்ய நாதெல்லா மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஆவார். ஸ்டீவ் பால்மரை தொடர்ந்து கடந்த  2014 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் முதன்மை செயல் அதிகாரியாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 1955-ஆம் ஆண்டு இந்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து,பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.ஆனால் இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதற்கு இடையில் அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா பங்கேற்றார்.இதன் பின்னர் செய்தியாளகர்ளை சந்தித்தார் சத்யா நாதெள்ளா.அப்பொழுது அவரிடம், BuzzFeedNews என்ற பத்திரிக்கையின் எடிட்டர் பென் ஸ்மித் குடியுரிமை சட்டம் குறித்து கேள்வி கேட்டார்.அதற்கு   அவர் பதில் அளிக்கையில், இந்தியாவில் நடப்பதை பார்க்க மிகவும் வருதமாகவுள்ளது. இது சரியானது  அல்ல. வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த ஒருவர் இந்தியாவில் அடுத்த யூனிகார்ன்  தயாரிப்பதையோ அல்லது இன்போஸிஸ் நிறுவனத்தின் அடுத்த சிஇஓ ஆவதையோ நான் காண விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனை பென் ஸ்மித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவாக பதிவிட்டுள்ளார்.

Published by
Venu

Recent Posts

குடிபோதையில் பயணம்! நடிகர் பாபி சிம்ஹாவின் கார் பறிமுதல்! ஒருவர் கைது!

குடிபோதையில் பயணம்! நடிகர் பாபி சிம்ஹாவின் கார் பறிமுதல்! ஒருவர் கைது!

சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…

1 minute ago

மதிமுகவில் இருந்து விலகிய துரை வைகோ! ஷாக்காகி வைகோ சொன்ன பதில்?

சென்னை :  துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…

18 minutes ago

பாஜக- அதிமுக கூட்டணி பார்த்து முதல்வர் பதற்றத்தில் இருக்கிறார்! தமிழிசை சௌந்தரராஜன் சாடல்!

சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…

21 minutes ago

“இவர்கள் மத்தியில் வேலை செய்ய முடியாது! நான் விலகுகிறேன்!” துரை வைகோ பரபரப்பு அறிக்கை!

சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…

35 minutes ago

என்னங்க வீட்லயே அடிக்கிறீங்க..? சொந்த மைதானத்தில் மோசமான சாதனை படைத்த பெங்களூர்!

பெங்களூர் : இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணி சிறப்பாக தங்களுடைய விளையாட்டை வெற்றிமூலம் ஆரம்பித்து இப்போது கொஞ்சம்…

1 hour ago

தடுமாறிய கார்..விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்திற்கு என்னாச்சு?

சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…

2 hours ago