சன்சாத் கேல் உள்ளூர் விளையாட்டு வீரர்களுக்கு, வெளிநாடுகளில் விளையாடும் வாய்ப்பை வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் பஸ்தியில் நடைபெறும், 2022-23 ஆம் ஆண்டிற்கான, சன்சாத் கேல் மஹாகும்பின் இரண்டாம் கட்டத்தை, பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். சன்சாத் கேல் மஹாகும்பம் 2021 முதல் பஸ்தி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.
சன்சாத் கேல் மஹாகும்பம் 2022-23, இரண்டு கட்டங்களாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டம் டிசம்பர் 10 முதல் 16, 2022 வரை நடைபெற்றது. கபடி, கூடைப்பந்து, சதுரங்கம், மல்யுத்தம், கோ-கோ உட்பட பல உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டுகள் கேல் மஹாகும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது, சான்சத் கேல் மூலம் உள்ளூர் விளையாட்டு வீரர்களுக்கு, வெளிநாடுகளில் கலந்து கொண்டு விளையாடும் வாய்ப்பு கிடைக்கப்பெறுவார்கள் என்று கூறினார். மேலும் கடந்த ஆண்டை விட 3 மடங்கு அதிகமாக 40,000 விளையாட்டு வீரர்கள் இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்கின்றனர் என்று மோடி மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…