மோடி பிரதமராக பதவியேற்று 7 ஆண்டுகள் நிறைவு பெரும் தினத்தை ‘கருப்பு தினமாக’ அனுசரிக்க டெல்லியில் போராடும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி கடந்த நவம்பர் மாதத்திலிருந்து தற்போது வரை டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர்.இதற்காக,டெல்லி எல்லையில் தங்கி 1000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து,வருகின்ற மே 26 ஆம் தேதியுடன் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கி 6 மாதம் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில்,இதுறித்து ‘சம்யுக்தா கிஷான் மோர்சா’ என்ற விவசாய சங்கத் தலைவர் பல்பீர் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது,”மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும்.மேலும்,நாங்கள் போராட்டத்தை தொடங்கி 6 மாதம் நிறைவடையவுள்ளது.
அதுமட்டுமல்லாமல்,பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று வருகின்ற 26 ஆம் தேதியுடன் 7ஆண்டுகள் நிறைவடையவுள்ளது.எனவே,அன்றைய தினத்தை ‘கருப்பு தினமாக’ அனுசரிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதைப்போல,நாட்டு மக்கள் அனைவரும்,தங்கள் வீடுகள் மற்றும் வானங்களில் மே 26 ஆம் தேதியன்று கருப்பு கொடியை ஏந்தி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்”, என்று கூறினார்.
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…
லக்னோ : இன்று ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதியது.இந்த போட்டியில்…
நடிகர் ஸ்ரீயா இது என அனைவரையும் அதிர்ச்சியாக்க கூடிய அளவுக்கு அவர் இப்போது இருக்கும் தோற்றம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…