ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜையோடு மகர விளக்கு பூஜையும் மிக பிரசித்திப் பெற்ற ஒன்றாகும்.
இந்த ஆண்டுக்கான மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஜயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30ம் தேதி திறக்கப்பட்டது.திறக்கப்பட்ட அன்று முதல் சுவாமி ஐய்யப்பனுக்கு பல்வேறு விசேஷ பூஜைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜையானது நாளை மாலை 6.35 மணிக்கு தொடங்குகிறது.இந்த நிகழ்வில் மகரவிளக்கு பூஜையின்போது சபரிமலையில் அமைந்துள்ள பொன்னம்பல மேட்டில் ஜோதியாக ஐயப்பன் தரிசன நிகழ்வு நடைபெறும்.மகரஜோதி தரிசனத்தை கண்டு ஐயப்பனின் அருளை பெற நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்வது தொடர்பான விவகாரத்தில் பல்வேறு போராட்டங்கள் அங்கு நடந்து வருவதால் சபரிமலை சுற்றியும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு சபரிமலையை சுற்றியும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…