Categories: இந்தியா

சமாஜ்வாடி எம்பி எழுப்பிய செங்கோல் சர்ச்சை.. அகிலேஷ் யாதவ் கூறுவதென்ன.?

Published by
மணிகண்டன்

டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்ட போது மன்னர் ஆட்சி காலத்தில் அந்த அவையில் ஆட்சியின் அடையாளமாக நிறுவப்பட்டு இருக்கும் செங்கோல் ஆனது , புதிய நாடாளுமன்ற கட்டத்திலும் நிறுவப்பட்டது. இதனை பிரதமர் மோடி நிறுவினார். இந்த செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாடி எம்பி கடிதம் எழுதி உள்ளார்.

சமாஜ்வாதி கட்சி எம்.பி ஆர்.கே.சௌத்ரி மக்களவை சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில், மக்களவை சபாநாயகர் இருக்கையின் வலதுபுறம் செங்கோல் இருப்பதை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். இது ஜனநாயக ஆட்சி மன்னராட்சி நடைமுறை இங்கு இல்லை. செங்கோல் என்பது முடியாட்சியின் அடையாளம்.

நமது பாராளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கோயில். அதில் செங்கோலை அகற்ற வேண்டும். அதற்கு பதிலாக இந்திய அரசியலமைப்பின் பிரமாண்ட பிரதியை அதில் நிறுவலாம். என வலியுறுத்தி கடிதத்தை எழுதியுள்ளார் சமாஜ்வாதி கட்சி எம்.பி ஆர்.கே.சௌத்ரி.

இது பற்றி சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், பிரதமர் மோடி தலைவணங்கி செங்கோலை நிறுவி உள்ளதால் எங்கள் எம்பி அவ்வாறு சொல்லி இருப்பார். பிரதமர் பதவியேற்ற போது செங்கோலை வணங்க மறுத்துவிட்டார். அதனை ஞாபகப்படுத்த எங்கள் எம்பி இவ்வாறு கருத்து கூறியிருக்கலாம் என்றும், நாட்டை அரசியலமைப்பு சட்டம் மூலமே ஆள வேண்டும், செங்கோலை கொண்டு ஆட்சி செய்ய கூடாது என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.

செங்கோல் விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், செங்கோலை மக்களவையில் நிறுவி  மத்திய அரசு விளையாடி வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்ட போது ஒரு நாடகத்தை பாஜக உருவாக்கியது. செங்கோலை அகற்ற வேண்டும் என சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த எம்பி கூறியது ஒரு நல்ல ஆலோசனை என்று அவர் கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…

7 hours ago

“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…

7 hours ago

“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…

7 hours ago

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!

சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…

10 hours ago

சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!

சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…

10 hours ago

போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…

11 hours ago