ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட் பதவியேற்பு…!

Default Image

ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் பதவி ஏற்றுக்கொண்டார்.
சமீபத்தில் வெளியான ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. 5 மாநிலங்களில் மொத்தம் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இதையடுத்து அந்த மூன்று மாநிலங்களில் முதலமைச்சர்களை நியமிப்பதில் கட்சி தலைமை முனைப்பு காட்டி வந்தது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் 18-ஆவது முதலமைச்சராக கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் இன்று பதவியேற்க உள்ளார். இதேபோல், ராஜஸ்தான் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள அசோக் கெலாட்டும் இன்று  பொறுப்பேற்க உள்ளார்.அதேபோல்  சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக புபேஷ் பாகல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் பதவி ஏற்றுக்கொண்டார். அசோக் கெலாட்டுக்கு ஆளுநர் கல்யாண்சிங் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். துணை முதல்வராக அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் பொறுப்பேற்றார்.முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தராராஜேவும், காங்கிரஸ் தலைவர் ராகுல், தி.மு.க தலைவர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்