சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களும் செல்லலாம் என்கிற தீர்ப்பை 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த சீராய்வு மனுக்கள் கடந்த வருடம் நவம்பர் மாதம் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் விசாரணை தொடங்கியது.
அதன் பிறகு , அந்த சீராய்வு மனுவில் முடிவு எட்டப்படாததால், சீராய்வு மனுக்களின் மீதான விசாரணையை 9 பேர் கொண்ட நீதிபதி அமர்வுக்கு மாற்றி பரிந்துரை செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே தலைமையிலான 9 பேர் கொண்ட நீதிபதி அமர்வு இன்று முதல் சீராய்வு மனுக்களை விசாரிக்க தொடங்கும் என கூறப்பட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய சீராய்வு மனுக்களை விசாரிக்க போவதில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. மாறாக சீராய்வு மனுக்கள் சம்பந்தப்பட்ட சில முக்கிய கேள்விகளை மட்டும் எழுப்ப உள்ளதாக உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.
ஆண், பெண் என்கிற பாகுபாடு கோவில் வழிபாட்டு முறைகளை சார்ந்ததா? பெண்களின் மாதவிடாய் காலங்களுக்கும் கோவில் வழிபாட்டிற்கும் தொடர்பு உள்ளதா? கோவில், மசூதிகளில் பெண்களுக்கு மட்டும் பாகுபாடு பார்ப்பதேன்? என்பது போன்ற சில கேள்விகளை மட்டும் 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கேட்க உள்ளதாம். புதிய சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்போவதில்லை என கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற சாசன அமர்வு தற்போது உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…