தற்போது கார்த்திகை மாதம் ஆரம்பித்துவிட்டதால் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால், மண்டல பூஜைகள் சபரிமலையில் தொடங்கிவிட்டதால்,சபரிமலை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.
இந்நிலையில் சபரிமலை சன்னிதானம் திறக்கப்பட்டு 10 நாட்களே ஆன, நிலையில், இதுவரை மலையேற்றத்தின் போது 34 பேர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 5 பேர் இறந்துவிட்டனர். இதேபோல, கடந்த ஆண்டு 173 பேர் மாரடைப்பால் அனுமதிக்கப்பட்டு, அவர்களில் 24பி பேர் இறந்துவிட்டனர். அதற்கு முந்தைய ஆண்டு, 281 பேர் அனுமதிக்கப்பட்டு, அதில் 36 பேர் உயிரிழந்தனர்.
இந்த வருடம் சபரிமலை சன்னிதானத்தில் 5 இருதய மருத்துவமனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாம். இருதய பிரச்சனை உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ முகாம்களுக்கு வந்து சிகிச்சை பெற்றுவிடலாம். அங்கே சிகிச்சை முடிந்து, பத்தனம்திட்டா, கோட்டயம் மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லப்படுவார்கள்.
இதய பிரச்சனை உள்ளவர்கள் தங்களது மருத்துவ குறிப்புகளை கண்டிப்பாக தங்களுடன் வைத்திருக்க வேண்டும், எனவும் அப்படி இருந்தால் முகாம்களில் உள்ள மருத்துவர்கள் விரைவாக சரியான சிகிச்சை அளிக்க உதவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…