சபரிமலை கோயில் விவகாரம்…! உச்சநீதிமன்றம் மறுப்பு

Default Image

சபரிமலை கோயில் தொடர்பான சீராய்வு மனுக்களை நீதிமன்றத்தில் விசாரிக்க கோரியது நிராகரித்துள்ளது உச்சநீதிமன்றம்.

சமீபத்தில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்துவந்த நிலையில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு எதிரான மனு மீது இன்று விசாரணைக்கு வருகிறது. சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு இன்று விசாரிக்கிறது.

இந்நிலையில்  சபரிமலை கோயில் தொடர்பான சீராய்வு மனுக்களை நீதிமன்றத்தில் விசாரிக்க கோரியது நிராகரித்துள்ளது. நீதிபதி அறையில்தான் சீராய்வு மனுக்கள் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதனால் இன்று பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. நீதிபதி அறையில் விசாரணை நடைபெற உள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்