சபரிமலை வழக்கு…!நாளை மீண்டும் விசாரணை …!

Default Image

சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்துவந்த நிலையில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.சபரிமலை விவகாரத்தில் மறு ஆய்வு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் பின்  நாளை (ஜனவரி 22 ஆம் தேதி )தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு மீண்டும் விசாரணை நடத்துகிறது.மேலும் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தடை ஏதும் இல்லை. சீராய்வு மனுக்களை விசாரித்தாலும் முந்தைய உத்தரவுக்கு தடை ஏதும் கிடையாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.அதேபோல் சபரிமலை மறு ஆய்வு மனுக்களை திறந்த நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்