ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் கேந்திரவித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவரான பிஸ்வந்த் பத்ரா என்பவர் ரஷ்யா நாட்டின் சோச்சி நகரில் நடைபெற்ற கல்வி சார்ந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நிதி ஆயோக் சார்பில் தேர்வு செய்யப்பட்டார்.மேலும் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து 25 மாணவர்களை இந்த நிதி ஆயோக் அமைப்பு இதற்காகத் தேர்வு செய்திருந்தது. இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 6ம் தேதி வரை நடைபெற்ற இந்த கண்காட்சியில் கலந்துகொண்டு மாணவர் பிஸ்வந்த் பத்ரா தனது கண்டுபிடிப்பை காட்சிப்படுத்தினார்.
அதில் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்கும் மற்றும் தண்ணீர் வழங்கும் `ஸ்மார்ட் வாட்டர் டிஸ்பென்சர்’ ஒன்றை அவர் வடிவமைத்திருந்தார். இந்தக் கண்காட்சியை நேரில் பார்வையிட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மாணவர் பிஸ்வந்திடம், அவரது கண்டுபிடிப்பு குறித்து விளக்க கேட்டிருக்கிறார், மாணவனும் விளக்கி கூறியிருக்கிறான். இந்தத் துறையில் மாணவருக்கு இருக்கும் ஆற்றலும் அறிவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை வியப்புக்குள்ளாக்கியதாக அவரது மொழிபெயர்ப்பாளர் தெரிவித்தார்.
மேலும் அவர், “உங்களைப் போன்ற இன்னும் நிறைய மாணவர்கள் இங்குவந்து, இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும். அது மிகவும் பெருமையளிக்கக் கூடியது” என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியதாக அவரது மொழிபெயர்ப்பாளர் தெரிவித்தார்.இந்நிலையில், ரஷ்ய அதிபரிடம் பாராட்டு பெற்ற இந்த சிறுவனை ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…
கேம்பிரிட்ஜ் : பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில், உள்ள K2-18 K2-18b எனப்படும் புறக்கோள் குறுமீனைச் சுற்றி வருகிறது. கடந்த…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…