Categories: இந்தியா

#RupeevsDollar: மத்திய நிதியமைச்சர் கூறியது முற்றிலும் உண்மை – ப.சிதம்பரம்

Published by
பாலா கலியமூர்த்தி

இந்திய ரூபாய் மதிப்பு சரியவில்லை, அமெரிக்க டாலர் மதிப்புதான் உயர்கிறது என நிதியமைச்சர் கூறியது உண்மை என ப.சிதம்பரம் விமர்சனம்.

சமீப நாட்களாக இந்திய ரூபாயின் மதிப்பு கண்டு வீழ்ச்சி அடைந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் விமர்சித்து வரும் நிலையில், இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதாக நான் பார்க்கவில்லை, அமெரிக்க டாலரின் மதிப்புதான் தொடர்ந்து உயர்ந்து வருவதாக பார்க்கிறேன். அனைத்து நாட்டு பணத்தை ஒப்பிடும்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82.69 என்றளவிற்கு குறைந்துள்ள நிலையில் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றும் அமெரிக்க டாலர் மதிப்பானது சர்வதேச சந்தையில் வலுவான நிலையில் உள்ளதால் மற்ற அனைத்து நாடுகளின் நாணயங்களும் அதற்கு எதிராகவே செயல்படுகின்றன எனவும் கூறியிருந்தார். நிதியமைச்சரின் கருத்தை அரசியல் தலைவர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரே தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கை செலுத்தினார். இதன்பின் பேசிய அவர், இந்திய ரூபாய் மதிப்பு சரியவில்லை. அமெரிக்க டாலர் மதிப்புதான் உயர்கிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது முற்றிலும் உண்மை. தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளரோ/ கட்சியோ, ’நாங்கள் தேர்தலில் தோற்கவில்லை. அவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளார்கள்’ என்று தானே எப்போதுமே கூறுவார்கள் என விமர்சித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

15 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

16 hours ago