"ரூபாய் 637,00,00,000 மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்" நீரவ் மோடிக்கு எதிராக அமலாக்கத்துறை அதிரடி..!!

Published by
Dinasuvadu desk

வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடிக்கு சொந்தமான வெளிநாடுகளில் உள்ள 637 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அதன் விவரங்களை இத்தொகுப்பில் காணலாம்.
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையில் 14,356 கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாட்டில் குடும்பத்தினருடன் பதுங்கியிருக்கும் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, Interpol எனப்படும் சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வரும் நபராக அறிவிக்கப்பட்டவர் ஆவார்.வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் நீரவ் மோடியை இந்தியாவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் அவரின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
Related imageபணமோசடி சட்டம் தடுப்பு பிரிவு 5ன் படி வெளிநாடுகளில் உள்ள நீரவ் மோடியின் 5 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 278 கோடி ரூபாய் பணம் இருப்பு உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரின் செண்ட்ரல் பார்க் பகுதியில் நீரவ் மோடியின் மனைவி ஏமி மோடி மற்றும் குழந்தைகள் பேரில் உள்ள இரண்டு சொகுசு பங்களாக்களுக்கு சீல் வைத்து முடக்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு சுமார் 216 கோடி ரூபாய் ஆகும்.
நீரவ் மோடியின் சகோதரியான பூர்வி மோடிக்கு சொந்தமாக பிரிட்டிஷ் விர்ஜின் தீவில் உள்ள முதலீட்டு நிறுவனத்தின் சிங்கப்பூர் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதில் 44 கோடி ரூபாய் இருப்பு உள்ளது.பூர்வி மோடிக்கு சொந்தமாக மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றும் முடக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 19.5 கோடி ரூபாயாகும்.
மேலும் பூர்வி மோடியின் பெயரில் லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றையும் அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். இதன் மதிப்பு 57 கோடி ரூபாயாகும். பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி புகார் பதிவு செய்யப்பட்ட பின்னரே இந்த வங்கிக் கணக்குகளில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது சிபிஐ விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.இதே போல ஹாங்காங்கில் அவருக்கு சொந்தமான 22.70 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் தற்போது இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
கடந்த மாதம் நீரவ் மோடியின் 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு சொத்துகளை அமலாக்கத்துறையினர் கண்டறிந்த நிலையில் தற்போது அவற்றில் 637 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.நீரவ் மோடியின் மீதான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினரின் பிடி நாளுக்கு நாள் இறுகி வரும் நிலையில் விரைவில் அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிமினல் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் இதுவரை ஒருசில வழக்குகளில் மட்டுமே வெளிநாட்டு சொத்துக்களை இந்திய புலனாய்வு அமைப்புகள் முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU 

Recent Posts

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

3 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

3 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

3 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

3 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

3 hours ago

ஐபிஎல் 2025 -இல் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள்…இந்த அணிக்கு செல்கிறீர்களா ரோஹித்-ராகுல்?

சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…

4 hours ago