மத்திய பிரதேசம் மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜ்யசபா எம்.பி.,யும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான சுப்பிரமணியசாமி, செய்தியாளர்களை சந்தித்து தனது ரூபாய் மதிப்பு தொடர்பான கருத்தை தெரிவித்தார். அதில், அவர் கூறியதாவது, இந்தோனேஷியா நாட்டின் ரூபாய் நோட்டில் விநாயகர் படம் அச்சிடப்பட்டுள்ளது.
விநாயகர் என்பவர் தடைகளை நீக்குபவர். இந்திய ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படம் அச்சிடப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும். இதற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். பிரதமர் மோடி இதற்கு பதில் அளிக்கட்டும் என்றார். மேலும் கூறிய அவர், குடியுரிமை திருத்த சட்டத்தில் தவறு ஒன்றும் இல்லை. காங்கிரஸ் கட்சியும், மகாத்மா காந்தியும், குடியுரிமை சட்டத்தை வலியுறுத்தியிருந்தனர். கடந்த 2003ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும் நாடாளுமன்றத்தில் இச்சட்டத்தை கோரியிருந்தார். நாங்கள் இப்போது அதை அமல்படுத்தி உள்ளோம். ஆனால் பாக்கிஸ்தான் முஸ்லிம்களுக்கு குடியுரிமை சட்டம் எதிராக உள்ளது எனக்கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதனை ஏற்க மறுக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார். இவரது இந்த கருத்து அனைத்து டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…
ஸ்ரீநகர் : இந்தியர்களுக்கு மற்றுமொரு கருப்பு நாளாக காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் அமைந்திருக்கிறது. ஆம், நேற்றைய தினம் ஜம்மு…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…
ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…