அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் 77.73 ஆக சரிவை சந்தித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் 77.73 ஆக சரிவை கண்டுள்ளது. எண்ணெய் விலை ஏறக்குறைய 8 வாரங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 77.45 டாலராக இருந்தது. நாட்டின் மிகப்பெரிய ஐபிஓவான (IPO) அரசு நடத்தும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் பட்டியலிலேயே இந்திய பங்குச் சந்தைகள் சற்றே உயர்ந்து வர்த்தகம் செய்கின்றன.
இதனிடையே, சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே போகிறது. தற்போதைய பொருளாதார சூழலின் அடிப்படையில் மே மாத இறுதிக்குள் ரூபாய் மதிப்பு 78-ஐ தாண்டக் கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர். இந்திய பங்குச் சந்தைகளில் உள்ள பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு, உள்நாட்டு பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 736 புள்ளிகள் உயர்ந்து, 53,710 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 226 புலிகள் அதிகரித்து, 16,068 புள்ளிகளில் வர்த்தகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…