வேலைவாய்ப்பை அதிகப்படுத்த ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு.!

Default Image

ஒரு குறிப்பிட்ட வேலையை செய்யும் அனைவரும் ஒரே ஊதியத்தை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டத்திற்கான 2 ம் கட்ட அறிவிப்புகளை நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இந்த அறிவிப்பில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் ஆகியோருக்கான 9 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. 

அதில், குறிப்பாக பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பை அதிகப்படுத்துவற்கான ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் உள்ள தொழிலாளர்களில் 30 சதவிகிதம் மட்டுமே குறைந்தபட்ச ஊதியம் பெறுகின்றனர். மற்றவர்களுக்கு அதை விட குறைவாகவே ஊதியம் கிடைக்கிறது. அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்யும் அனைவரும் ஒரே ஊதியத்தை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்