கர்நாடக எம்.எல்.ஏ மருமகனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.51 லட்சம் வழங்கப்படும் என்று மீரட்டில் ஒரு நபர் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ அகந்தா சீனிவாஸ் மூர்த்தியின் மருமகன் நவீன் என்பவர் இஸ்லாம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக அளிக்கப்பட்ட புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், கும்பல் ஒன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ வீட்டையும், காவல் நிலையத்தையும் தாக்கினர். இதன் காரணமாக பெங்களூரில் ஏற்பட்ட வன்முறையில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர். பின்னர் வன்முறை தொடர்பாக எம்.எல்.ஏவின் உறவினர்கள் உட்பட 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கர்நாடக எம்.எல்.ஏ மருமகனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.51 லட்சம் வழங்கப்படும் என்று மீரட்டில் ஒரு நபர் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், மிரட்டல் விட்ட நபர் உத்தரபிரதேசத்தில் மீரட் மாவட்டத்தில் உள்ள ஃபலாவாடா நகரில் வசிக்கும் ஷாஜெப் ரிஸ்வி என கண்டறியப்பட்டு, அந்த நபர் பேசிய வீடியோவை கைப்பற்றி, ஐபிசி 153ஏ, 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த நபர் தலைமறைவாக இருப்பதால் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரை தேடி வருகிறோம் விரைவில் கைது செய்வோம் என தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…