சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ரூ .50 ஆயிரம் கோடி கடன் -பிரதமர் மோடி..!

Published by
Edison

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மருத்துவர்களிடையே காணொலி வாயிலாக உரையாற்றினார்.

பிரபல மருத்துவரும் முன்னாள் மேற்கு வங்க முதல்வருமான பிதன் சந்திர ராய் மருத்துவ துறையில் பல்வேறு சேவைகளை செய்துள்ளதால் அவரது நினைவை அனுசரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும்  ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி,இன்று பலரும் மருத்துவர்களை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில்,தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மருத்துவர்களிடையே காணொலி வாயிலாக உரையாற்றினார்.இந்த நிகழ்வை இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) ஏற்பாடு செய்தது.அந்த உரையில் அவர் கூறியதாவது:

“நமது மருத்துவர்களும் மருத்துவத் துறையை சேர்ந்தவர்களும் நாட்டிற்கும்,130 கோடி மக்களுக்கும் சேவை செய்ய இரவும் பகலும் அயராது உழைத்துள்ளனர்.இதனால்,அனைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா சிகிச்சையின் போது பல மருத்துவர்களே உடல்நலம் மற்றும் தனிப்பட்ட பல பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.இருப்பினும், அவர்கள் சிகிச்சையை நிறுத்தவில்லை.தங்கள் உயிருக்காக போராடிய நிலையிலும் மருத்துவர்கள் பல லட்சம் பேருக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது பல மருத்துவர்கள் தங்கள் உயிரை இழந்தனர்.

நம் நாடு கொரோனா வைரஸுக்கு எதிராக போராடும் போது, ​பல மருத்துவர்கள் மக்களுக்கு சேவை செய்யும்போது தங்கள் உயிரை இழந்துள்ளனர்.எனவே,அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும்,மருத்துவர்களின் அறிவும், நிபுணத்துவமும் கொரோனாவின் கடினமான காலங்களில் நம் தேசத்தை காப்பாற்றியது.

ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு இறப்பு விகிதத்தை கவனித்தால், வளர்ந்த நாடுகளை விட நமது நாடு சிறப்பாக முன்னேறி வருகிறது. நம்மால் பலரையும் காப்பாற்ற முடிந்தது, இந்த அனைத்து பெருமையும் நமது மருத்துவர்கள், முன்கள பணியாளர்களையே சார்ந்துள்ளது.

மக்கள் அனைவருக்கும் தரமான சுகாதார சேவையை வழங்க,மருத்துவ உள்கட்டமைப்பு இல்லாத பகுதிகளில் சுகாதார கட்டமைப்பை மேலும் மேம்படுத்த ரூ .50 ஆயிரம் கோடி கடன் திட்டம் தொடங்கப்படும்,குழந்தை பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பை வலுப்படுத்த 22 ஆயிரம் கோடி ரூபாய் தொகையும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

நாடு முழுவதும் 15 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள்,மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.குறிப்பாக மருத்துவத் துறைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பணிகள் நடந்து வருகிறது.

மேலும்,அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எப்போதும் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Published by
Edison
Tags: PM Modi

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

10 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

10 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

10 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

10 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

10 hours ago