#BREAKING: ரூ.50,000 கோடிக்கு சலுகைகள் அறிவித்த ரிசர்வ் வங்கி..!

Published by
murugan

மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடிக்கு சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கொரோனா சூழ்நிலைகளை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருவதாக தெரிவித்தார். இரண்டாவது அலை முதல் அலைகளை விட ஆபத்தானது என்று அவர் கூறினார்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் செய்தியாளர் கூட்டத்தில், முதல் அலைக்குப் பிறகு பொருளாதாரம் சிறந்த முன்னேற்றத்தைக் கண்டதாகக் கூறினார். நல்ல பருவமழை காரணமாக கிராமங்களில் தேவை அதிகரிக்கும் என்று அவர் நம்பினார். கொரோனாவின் இரண்டாவது அலைக்கு எதிராக போராட மருத்துவமனைகள், ஆக்ஸிஜன் சப்ளையர்கள், தடுப்பூசி இறக்குமதியாளர்கள், கொரோனா மருந்துகள் ஆகிய மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடிக்கு சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது.

பொதுமக்கள், வணிகம் தொழில்துறையினர் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வோம். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி 50 ஆயிரம் கோடி கூடுதல் கடன் அளிக்கும். சிறிய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி பத்தாயிரம் கோடி கூடுதல் கடன் அளிக்கும் என தெரிவித்தார்.

இந்தியாவில் நேற்று ஒரு நாளில் 3 லட்சத்து 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்று முன்தினத்தை இருந்ததை விட சுமார் 28 ஆயிரம் பேர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் வெறும் 15 நாட்களில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

“தமிழகத்தின் உரிமைகளை கோட்டை விட்டு நாடகம் நடத்தி வருகிறார் ஸ்டாலின்” – அண்ணாமலை குற்றச்சாட்டு!

“தமிழகத்தின் உரிமைகளை கோட்டை விட்டு நாடகம் நடத்தி வருகிறார் ஸ்டாலின்” – அண்ணாமலை குற்றச்சாட்டு!

சென்னை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசு நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தை "ஒரு நாடகம்" என்று…

1 hour ago

“இது எண்ணிக்கை பற்றியது அல்ல.. அதிகாரத்தை பற்றியது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம், இன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று…

2 hours ago

காஞ்சி பட்டு முதல் கடலை மிட்டாய் வரை… அரசியல் தலைவர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த பரிசு!!

சென்னை : சென்னையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கியது. கேரளா,…

2 hours ago

“வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமான நாள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்…

3 hours ago

LIVE : கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் முதல்… இன்று தொடங்கும் ஐபிஎல் திருவிழா வரை.!

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கூட்டு நடவடிக்கைக் குழு தொடர்பான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

4 hours ago

தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய மழை… இன்று இந்த 10 மாவட்டங்களில் கனமழை.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும்…

4 hours ago