#BREAKING : புதுச்சேரியில் குடும்பத்திற்கு ரூ.5,000 அறிவிப்பு..!

Default Image

புதுச்சேரியில் மழை பாதிப்பு நிவாரணமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படு்ம் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி அரசு மழை நிவாரணத்துக்கு இடைக்கால நிவாரணமாக 300 கோடி ரூபாயை கோரியுள்ளது. பாகூர், சேலியமேடு, அரங்கனூர் மணவெளி தொகுதிகளில் மழையால் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் மஞ்சள் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் 5000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

மேலும், 7000 ஹெக்டேருக்கு விளைநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். ஏற்கனவே சிவப்பு ரேஷன் கார்டுக்கு ரூபாய் 5000 வழங்கப்படும் நிலையில் தற்போது மஞ்சள் கார்டுகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்