மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள சந்தைகளில் ஒரு மணி நேரத்துக்கு 5 ரூபாய் கட்டணம் நிர்ணயித்தும், ஒருமணி நேரத்திற்குள் வெளியே வராவிட்டால் ரூ.500 அபராதம் விதித்தும் நகராட்சி நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் தற்பொழுது கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,000-ஐ கடந்து வரும் நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,21,49,335 ஆக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக கொரோனா தடுப்பு பணிகளை மத்திய, மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் மகாராஷ்டிராமாநிலத்தில் உள்ள மும்பை, புணே ஆகிய நகரங்களில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே வருவதால், இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நாசிக் நகரிலும் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு மக்கள் பலரும் முகக்கவசம் அணியாமல் அங்கும், இங்கும் சென்று வருவதால் அங்கு கொரோனா பரவலுக்கான ஆபத்து அதிகமாக உள்ளது.
இந்நிலையில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் நாசிக்கில் உள்ள சந்தைகளுக்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.5-ஐ கட்டணமாக நிர்ணயித்து நாசிக் நகராட்சி நிர்வாகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஒரு மணி நேரத்திற்குள் வெளியே வராவிட்டால் ரூ.500 அபராதம் விதித்தும் உத்தரவித்துள்ளது. இதன் மூலம் மார்க்கெட்டில் கூட்டங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…