Categories: இந்தியா

பெண்களுக்கு ரூ.3000.. இலவச வீடு… இலவச அரிசி.! தெலுங்கானா முதல்வரின் தேர்தல் அறிவிப்புகள்.!

Published by
மணிகண்டன்

அண்மையில் இந்திய தேர்தல் ஆணையம், 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை அறிவித்தது. அதன்படி தெலுங்கானா மாநிலத்திற்கு வரும் நவம்பர் 30ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 5 மாநில தேர்தலும் ஒரே நாளான டிசம்பர் 3ஆம் தேதி முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 88 தொகுதிகளை கைப்பற்றி, பாரதிய ராஷ்டிரிய சமிதி (BRS) கட்சி ஆட்சியை மீண்டும் தக்கவைத்தது. சந்திரசேகர ராவ்  மீண்டும் தெலுங்கானா முதல்வரானார்.

Assembly Elections 2023: காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியானது..!

தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், நேற்று தங்கள் கட்சியின் அடுத்த 5ஆண்டுகால திட்டம் என தேர்தல் அறிக்கையை முதல்வர் சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ளார். தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டத்தில் உள்ள ஹுஸ்னாபாத்தில் இந்த தேர்தல் அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

கடந்த 2018 தேர்தல் பொதுக்கூட்டம் அறிவிப்பும் ஹுஸ்னாபாத்தில் தான் தொடங்கபட்டது. அதே போல் இந்த முறையும் ஹுஸ்னாபாத்தில் தேர்தல் அறிவிப்புகள் தொடங்கி நவம்பர் 9 ஆம் தேதி வரை 41 பொது பேரணிகளில் முதல்வர் சந்திரசேகர ராவ்  சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்..

நேற்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்த முக்கிய அறிவிப்புகள்..

  • சௌபாக்யலட்சுமி எனும் திட்டத்தின் கீழ் தகுதியுடைய மகளிருக்கு மாதம் 3000 ரூபாய் வழங்கப்படும்.
  • தகுதியுள்ள அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் கியாஸ் சிலிண்டர்.
  • முதியோர் ஓய்வூதியம் ஆண்டுக்கு ரூ.5000 ஆக உயர்த்தப்படும்.
  • ஆரோக்கியஸ்ரீ பீமா திட்டத்தின்  கீழ் மருத்துவ காபபீடு அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் என உயர்த்தபடும்.
  • முழு பிரீமியத்தை அரசு செலுத்தி அனைத்து பிபிஎல் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் (மருத்துவ காப்பீடு) 5 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் திட்டம் .
  • கிரஹ லக்ஷ்மி திட்டத்தின் கீழ் ஹைதராபாத்தில் 1 லட்சம் எண்ணிக்கையில் 2 படுக்கையறை வசதி கொண்ட வீடுகள் வழங்கப்படும்.
  • பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான 119 அரசு குடியிருப்புகள் கட்டித்தரப்படும்.
  • மகளிர் குழுக்களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டி தரப்படும்.
  • தெலுங்கானா அரசின் பெற்றோர் அற்ற குழந்தைகள் கொள்கையை மாநில குழந்தைகளாகக் கொண்டு குழந்தைகள் நலன் குறித்த திட்டங்கள் செயல்படுத்தபடும்.
  • அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்து ஆய்வு செய்து அதனை உயர்த்த, உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்க தெலுங்கானா அன்னபூர்ணா திட்டம் செயல்படுத்தப்படும்.
Published by
மணிகண்டன்

Recent Posts

நீங்க இல்லைனா என்ன நான் இருக்கேன்…சர்ச்சை கொண்டாட்டத்தை செய்த ஆகாஷ் சிங்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…

10 minutes ago

கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

53 minutes ago

மாணவர்களே ஜூன் 2 பள்ளிகள் திறப்பு! முன்னேற்பாடு செய்ய உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை!

சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…

1 hour ago

“உங்க ரத்தம் கேமரா முன் மட்டும் ஏன் கொதிக்கிறது?” -பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி!

ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…

2 hours ago

கட்டுப்பாட்டை இழந்த கார்…விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி!

கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…

2 hours ago

LSG vs GT: இறுதி வரை போராட்டம்.. வீன் போன ஷாருக் அரைசதம்.. லக்னோ மாஸ் வெற்றி.!

அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

9 hours ago