டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தால் ரூ.27,000 கோடி இழப்பு – அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு

Published by
லீனா

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால், சுமார் ரூ.27 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களான உத்திரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் ஒரு மாதத்திற்கு மேலாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பலமுறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் இதற்கு ஒரு முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில் இந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு பல கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கூறுகையில், டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால், சுமார் ரூ.27 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தேசிய தலைவர் பார்டியா மற்றும் தேசிய பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் ஆகியோர் கூறுகையில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு வரும் பொருட்கள் வராததால், மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் பிற மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு பொருட்கள் வருவதும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் சுமார் 50 ஆயிரம் லாரிகள் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு டெல்லிக்கு வருவதாகவும், சுமார் 30 ஆயிரம் லாரிகள் தலை நகருக்கு வெளியே பொருட்களை கொண்டு செல்வதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டம் காரணமாக முழு நாட்டிற்கும் பொருட்கள் வழங்குவது பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

1 hour ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

2 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

3 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

3 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

4 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

6 hours ago