டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தால் ரூ.27,000 கோடி இழப்பு – அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு

Published by
லீனா

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால், சுமார் ரூ.27 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்களான உத்திரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் ஒரு மாதத்திற்கு மேலாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பலமுறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் இதற்கு ஒரு முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில் இந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு பல கட்சித் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கூறுகையில், டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால், சுமார் ரூ.27 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தேசிய தலைவர் பார்டியா மற்றும் தேசிய பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் ஆகியோர் கூறுகையில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு வரும் பொருட்கள் வராததால், மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் பிற மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு பொருட்கள் வருவதும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் சுமார் 50 ஆயிரம் லாரிகள் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு டெல்லிக்கு வருவதாகவும், சுமார் 30 ஆயிரம் லாரிகள் தலை நகருக்கு வெளியே பொருட்களை கொண்டு செல்வதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டம் காரணமாக முழு நாட்டிற்கும் பொருட்கள் வழங்குவது பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

“ஹிந்தி தான் பேசுவேன்” அடம்பிடித்த பெண் ஊழியர்! மகாராஷ்டிராவில் வெடித்த மொழி சர்ச்சை!

“ஹிந்தி தான் பேசுவேன்” அடம்பிடித்த பெண் ஊழியர்! மகாராஷ்டிராவில் வெடித்த மொழி சர்ச்சை!

மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு  மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…

7 hours ago

இனி இப்படிதான்! ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு!! ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு.!

கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…

8 hours ago

“வெங்கடேஷ் ஐயருக்குப் பதிலாக ரஹானே”… கேப்டனை மாற்றியது ஏன்? கேகேஆர் விளக்கம்.!

டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…

9 hours ago

பட்ஜெட்டில் முக்கிய ‘அடையாள’ மாற்றம் : தமிழுக்கு ‘ரூ’ முக்கியத்துவம்!

சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…

10 hours ago

அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!

டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…

11 hours ago

நாளை தமிழக பட்ஜெட் : ஆய்வறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…

12 hours ago