தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய ரூ.2,250 என நிர்ணயித்து அரசாணையை வெளியிட்டுள்ளது கர்நாடகா அரசு .
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது .இதனால் ஊரடங்கு மே 3 ம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது .இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,835-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,767 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்து வீடு திரும்பியுள்ளனர் ,452 பேர் உயிரிழந்துள்ளனர் .
இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது , நேற்று (வெள்ளிக்கிழமை ) மட்டும் 44 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது .இதனை அம்மாநில சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது .இதுவரை அங்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர் 88 பேர் குணமடைந்துள்ளனர் .பெங்களூரு நகரத்தில் அதிக எண்ணிக்கையாக 86 ஆகவும், மைசூருவில் 73 பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இதுவரை 17,000 க்கும் மேற்பட்ட மாதிரிகளை அம்மாநில அரசு சோதனை செய்துள்ளது.
இதற்கிடையில் அம்மாநில அரசு கொரோனா குறித்து தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்வதற்கான தொகையே நிர்ணயித்துள்ளதாக அரசாணையை வெளியிட்டுள்ளது .அதில் கூறியிருப்பது இந்திய மருத்துவ கவுன்சில் கொரோனா குறித்து பரிசோதனை செய்துகொள்ள 16 ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் .இதில் 11 அரசாங்கம் மற்றும் 5 தனியார் ஆய்வகங்கள் அடங்கும் . தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய ரூ.2,250 என நிர்ணயித்து அரசாணையை வெளியிட்டுள்ளது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…