நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
ஆம் ஆதமி கட்சி ஆளும் டெல்லி மாநில அரசுடன் இணைந்து செயல்பட போவதாக அறிவித்த நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சமூக சேவைகள் மூலம் புகழ்பெற்ற நடிகர் சோனு சூட் சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார்.
அப்போது, ஆம் ஆதமி கட்சி ஆளும் டெல்லி மாநில அரசின் திட்டம் ஒன்றிற்கு விளம்பர தூதரக நடிகர் சோனு சூட் நியமிக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். இந்த சூழலில் சோனு சூட்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு கொரோனா அலையின் போது நிறுவப்பட்ட சோனு சூட்டின் தொண்டு நிறுவனம் ரூ.18 கோடி வரை நன்கொடை பெற்றிருப்பதும், இதில் ரூ.17 கோடி பயன்படுத்தப்படவில்லை என்பது தெரிய வந்துருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் சோனு சூட் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. நடிகர் சோனு சூட் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில், மும்பையில் உள்ள அவருக்கு சொந்தமான ஆறு இடங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடைய, ஆம் ஆத்மி அரசுடன் இணைந்துள்ள நடிகர் சோனு சூட்டை மிரட்டவே வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது என்று சிவசேனா உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றசாட்டியுள்ளனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…