மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணியில் ஆட்சியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட சிக்கலால் இரு கட்சிக்கும் இடையில் கூட்டணி முறிந்தது.
அதன் பின்னர் மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியமைப்பதில் பல குழப்பங்கள் ஏற்பட்டது. இதையடுத்து நீண்ட குழப்பங்களுக்கு பிறகு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார்.
சிவசேனாவின் தேர்தல் அறிக்கையில் விவசாயி பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற அம்சங்கள் இருந்தனர்.மேலும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தனர்.
இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று ரூ.2 லட்சம் வரை விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என உத்தவ் தாக்கரே அறிவித்தார். வங்கிகளில் 2019-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ரூ.2 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை வங்கிகளில் நேரடியாக செலுத்தப்படும் என கூறினார்.
ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பயிர்க்கடனை முழுவதும் தள்ளுபடி செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் வெளி நடப்பு செய்தனர்.
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…