கொரோனா தடுப்பு பணிக்காக இந்தியா 2.2 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்படும் என ஆசிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோன வைரஸ் தீவிரமடைந்து வருவதால், மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6412 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 199 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க மத்திய, மாநில அரசு கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நிதியை வழங்கலாம் என்று கேட்டுக்கொண்டது. இதனால் பலரும் தங்களால் முடிந்த நிதியை வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக இந்தியாவுக்கு ரூ.16,698 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் பரவிய கொரோனா தொற்றை பரவாமல் தடுக்க ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.16,698 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், இந்தியா சுகாதாரத் துறைக்கு 2.2 பில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளதாகவும், தொற்றுநோய்களால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார தாக்கத்தை ஏழைகளுக்குத் குறைக்க உதவுவதாக தெரிவித்துள்ளது. மேலும் அமைப்புசாரா தொழிலாளர்கள், மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…