பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டு பல துறைகளில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதனையடுத்து,பிரதமர் மோடி தலைமையில், புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில், புதிதாக பதவியேற்ற 43 அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.அக்கூட்டத்தில் சுகாதார மற்றும் வேளாண் துறைகளுக்கான மேம்பாடுகள் போன்றவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி,நாடு முழுவதும் 736 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப மற்றும் மாவட்ட சுகாதார மையங்களில் மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மாநிலங்களுக்கு ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யவும், இத்திட்டங்களை ஒன்பது மாதங்களுக்குள் செயல்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக,கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளை மேம்படுத்தவும், மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்கவும் பல்வேறு துறைகளுக்கு 1.1 லட்சம் கோடி கடன் உறுதி திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…