ஐந்து குழந்தைகள் பெற்ற கத்தோலிக்க தம்பதிகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் சீரோ மலபார் கத்தோலிக்க ஆலயத்தின் பாலா மறைமாவட்டம் சார்பில் குடும்ப ஆண்டு கடைபிடிக்கப்படுகிறது. மத்திய கேரளாவை சேர்ந்த பாலா மறைமாவட்ட ஆயர் ஜோசப் கல்லரங்காட் மற்ற ஆலயங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, அனைத்து ஆலயங்களிலும் குடும்ப ஆண்டு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதன் பின்னர் அனைத்து ஆலயங்களுக்கு உட்பட்டு வசிக்கும் கத்தோலிக்க குடும்பங்களில் 5 அல்லது அதற்கு மேல் குழந்தைகள் உடைய பெற்றோருக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.
மேலும், அந்த குழந்தைகளுக்கு சலுகைகளாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மறை மாவட்டத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் இலவச கல்வியும், மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர்.
இது பற்றி பாலா மறைமாவட்ட குடும்ப நல இயக்கத்தின் பாதிரியார் ஜோசப் குற்றிங்கல் கூறியிருப்பதாவது, கேரளாவில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இந்த உதவிகள் வழங்கப்படுவதாக கூறியுள்ளார். மாநிலத்தில் 18.38% ஆக இருந்த கத்தோலிக்கர்கள் எண்ணிக்கை தற்போது 14% ஆக குறைந்துள்ளது.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…