குஜராத் மாநிலம், காந்திநகா் மாவட்டத்தில் 3-வது சா்வதேச உருளைக்கிழங்கு மாநாடு நடைபெற்றது. நாட்டில் உருளைக்கிழங்கு விளைச்சல் குறித்த ஆய்வு, அந்தத் துறையில் உள்ள சவால்கள், அவற்றுக்கான தீா்வுகள் ஆகியவை குறித்து பேசுவதற்காக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சா்வதேச உருளைக்கிழங்கு மாநாடு இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்னா் கடந்த 1998 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் இந்த மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய உருளைக்கிழங்கு சங்கம், டெல்லியில் உள்ள விவசாய ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் மற்றும் மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.
இந்நிலையில், குஜராத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக இணைந்து உரையாற்றிய பிரதமர் மோடி, சில குறிப்பிட்ட உணவு தானியங்கள், உணவுப் பொருட்களை அதிகம் உற்பத்தி செய்யும் முதல் மூன்று நாடுகளுள் நம் இந்திய நாடும் இருக்கின்றது. இந்த சாதனை நமது விவசாயிகளின் அயராத உழைப்பாலும், அரசின் சிறப்பான திட்டங்களாலுமே சாதித்தியமாகியுள்ளது. மேலும் வரும் 2022-ம் ஆண்டுக்குள் நம் நாட்டு விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்க பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றோம். பின்னர் விவசாயிகளுடன் அரசும் இணைத்திருப்பதாலே பல சாதனைகளை நிகழ்த்த முடிகிறது. சுமார் 6 கோடி விவசாயிகளுக்கு இதுவரையில் ரூ.12 ஆயிரம் கோடி பணம் அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக போடப்பட்டுள்ளது என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…