கேரளாவில் பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.10,000 அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும் என அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.
கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக அங்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அங்கு இன்று ஒரே நாளில் 193 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5,522 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் பரவலை குறைக்கும் நடவடிக்கையாக, கேரளாவில் ஜூலை 2021 வரை பொதுமுடக்க விதிமுறைகள் நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு நேற்று தெரிவித்துள்ளது. அதன்படி, முகக்கவசம் அணிவது, சமூகஇடைவெளியை பின்பற்றுவது, எச்சில் துப்புவது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால், அங்கு ரூ.10,000 அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் அங்கு திருமண நிகழ்ச்சியில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது என சில காட்டுப்பாடுகளை அடுத்தாண்டு ஜூலை மாதம் வரை நீடித்துள்ளது.
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…