டெல்லியில் 4 கி.மீ தூரத்திற்கு ஆம்புலன்ஸ் வாடகை ரூ.10,000 பெறப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக, காட்டு தீ போல் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், இந்தியாவில், தினசரி பாதிப்பு 3.50 லட்சத்தை கடந்துள்ள நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், தொற்றால் இறப்பவர்களின் சடலங்களை எரிப்பதற்கு கூட இடமில்லாமல் திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ரா என்பவர், தனது ட்வீட்டர் பக்கத்தில், ஏப்ரல் 25-ம் தேதி பதிவிடப்பட்ட, ஆம்புலன்ஸ் ரசீது ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த ரசீதில், டெல்லியில் 4 கி.மீ தூரத்திற்கு ஆம்புலன்ஸ் வாடகை ரூ.10,000 பெறப்பட்டுள்ளது. இந்த ரசீதை பதிவிட்ட அவர், ‘இந்த உலகம் இன்று நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது. பேரழிவுகளை மட்டுமா. உங்களது தார்மீக மதிப்புகளை கூட’ என பதிவிட்டுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…