பொது இடங்களில் ‘முகக்கவசம்’ அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதம் – அரசு அதிரடி உத்தரவு!

Published by
Edison

ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,அனைத்து வகையான பேரணிகள்,பொதுக் கூட்டங்களுக்கு தடை மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில்,ஒமைக்ரான் வகை உருமாறிய கொரோனா தொற்றும் இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது.இதன்காரணமாக,உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியது.

மேலும்,இரவு நேர ஊரடங்கு,பொதுமக்கள் கூட்டமாக கூட தடை போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.அந்த வகையில்,டெல்லி,கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.

குறிப்பாக,பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநில அரசுகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,ஜனவரி 10 ஆம் தேதி வரை அனைத்து வகையான பேரணிகள்,பொதுக் கூட்டங்களுக்கு தடை மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.அபராதம் விதிப்பது உள்ளிட்டவை தொடர்பாக காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு வழங்கியுள்ளது.

மேலும்,பொது இடங்களில் முகக்கவசம்,சமூக இடைவெளியை பராமரித்தல், கை சுகாதாரம் போன்றவற்றை அனைத்து நபர்களும்  கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Recent Posts

“இந்த சீசன் சென்னை சரியா ஆடல என்பது உண்மைதான்” – சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன்.!

புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…

29 minutes ago

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி., உங்கள் பாதையே வேண்டாம்! பாகிஸ்தானை தவிர்த்த பிரதமர் மோடி!

டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

55 minutes ago

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் : “அமித் ஷா பதவி விலகனும்”… திருமாவளவன் கடும் கண்டனம்!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…

3 hours ago

‘அந்த இடத்திற்கு செல்லாததால் தப்பிய தமிழர்கள் 68 பேர்’ – சுற்றுலா சென்ற மதுரை நபர் சொன்ன தகவல்.!

பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…

3 hours ago

“மோடி கிட்ட போய் சொல்லு”… கணவனை இழந்து கெஞ்சிய பெண்ணிடம் பயங்கரவாதி சொன்ன விஷயம்?

பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…

4 hours ago

பஹல்காமில் 26 பேரை கொன்ற பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு.!

பஹல்காம் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான…

4 hours ago