பொது இடங்களில் ‘முகக்கவசம்’ அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதம் – அரசு அதிரடி உத்தரவு!

Published by
Edison

ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,அனைத்து வகையான பேரணிகள்,பொதுக் கூட்டங்களுக்கு தடை மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில்,ஒமைக்ரான் வகை உருமாறிய கொரோனா தொற்றும் இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது.இதன்காரணமாக,உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியது.

மேலும்,இரவு நேர ஊரடங்கு,பொதுமக்கள் கூட்டமாக கூட தடை போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.அந்த வகையில்,டெல்லி,கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.

குறிப்பாக,பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநில அரசுகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,ஜனவரி 10 ஆம் தேதி வரை அனைத்து வகையான பேரணிகள்,பொதுக் கூட்டங்களுக்கு தடை மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.அபராதம் விதிப்பது உள்ளிட்டவை தொடர்பாக காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு வழங்கியுள்ளது.

மேலும்,பொது இடங்களில் முகக்கவசம்,சமூக இடைவெளியை பராமரித்தல், கை சுகாதாரம் போன்றவற்றை அனைத்து நபர்களும்  கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

22 mins ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

41 mins ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

53 mins ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

56 mins ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

2 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

2 hours ago