மும்பை முலுண்டில் உள்ள அலுவலகத்தில் துப்பாக்கி முனையில் 1 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
மும்பை முலுண்ட் பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தில் துப்பாக்கி முனையில் சுமார் ரூ.1 கோடியை கொள்ளையடித்த அடையாளம் தெரியாத மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முலுண்ட் காவல்துறை மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகள் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், குற்றவாளிகள் இருவர் உரிமையாளரையும், ஊழியர்களையும் கைத்துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி அலுவலகத்தில் இருந்த பணத்தை பறிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய வாகனமும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும் போலீசார் அந்த காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை கண்டுபிடிக்க முயற்சித்து வருவதாக குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முலுண்ட் காவல் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் அந்த அலுவலகம் அமைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். நேற்று பிற்பகல் 3 மணியளவில் அலுவலக உரிமையாளரும், அவரது இரண்டு ஊழியர்களும் அங்கு இருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…