மும்பை முலுண்டில் உள்ள அலுவலகத்தில் துப்பாக்கி முனையில் 1 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது.
மும்பை முலுண்ட் பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தில் துப்பாக்கி முனையில் சுமார் ரூ.1 கோடியை கொள்ளையடித்த அடையாளம் தெரியாத மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முலுண்ட் காவல்துறை மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகள் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், குற்றவாளிகள் இருவர் உரிமையாளரையும், ஊழியர்களையும் கைத்துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி அலுவலகத்தில் இருந்த பணத்தை பறிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய வாகனமும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும் போலீசார் அந்த காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை கண்டுபிடிக்க முயற்சித்து வருவதாக குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முலுண்ட் காவல் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் அந்த அலுவலகம் அமைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். நேற்று பிற்பகல் 3 மணியளவில் அலுவலக உரிமையாளரும், அவரது இரண்டு ஊழியர்களும் அங்கு இருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…
சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…
சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…