அதிகரிக்கும் விவசாயிகள் தற்கொலை – அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக சாடிய அமரீந்தர் சிங்!

Published by
Rebekal

நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் பிரச்சினை ஏற்பட்டு காங்கிரஸ் கட்சி தலைவர் மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக அம்ரீந்தார் சிங் ராஜா அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார்.

இந்நிலையில் தற்போது தேர்தல் வாக்குறுதி குறித்து பேசியுள்ள ராஜா,  பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் விவசாயிகள் தற்கொலைகளை நடக்காது என கடந்த வருடம் அக்டோபர் மாதம் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை அரவிந்த் கெஜ்ரிவால் நினைவில் கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த இருபத்தி நான்கு நாட்களில் மட்டும் 14 தற்கொலைகள் நடந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமட்டுமில்லாமல்,  விவசாயிகளுக்கு நீங்கள் அளித்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை? ஏன் இதுபோன்ற பிரச்சினையில் அமைதியாக இருக்கிறீர்கள் எனவும் அவர் அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் முந்தைய காங்கிரஸ் அரசு தங்கள் வாக்குறுதியை காப்பாற்றியதாகவும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை கடன்களை தள்ளுபடி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குமாறு அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago