76 ஆண்டுகளாக உணவின்றி வாழ்ந்து வந்த அதிசய சாமியார் உயிரிழந்தார்.!

Published by
மணிகண்டன்

76 ஆண்டுகளாக உணவு சாப்பிடாமல் வாழ்ந்து வந்த சாது பிரகலாத் ஜனி என்கிற 90 வயது சாமியார் உடல் நல குறைவால் உயிரிழந்தார்.  

குஜராத் மாநிலத்தில் காந்திநகர் மாவட்டதிலுள்ள சரடா என்கிற கிராமத்தை சேர்ந்த சாது பிரகலாத் ஜனி என்கிற 90 வயது சாமியார் இன்று உடல் நல குறைவால் உயிரிழந்தார்.  

இவர் கடந்த 76 ஆண்டுகளாக உணவு சாப்பிடாமல் வாழ்ந்து வந்துள்ளார் என கூறப்படுகிறது. இவரை மக்கள் மாதாஜி என அழைத்து வந்துள்ளனர்.

இவர் உணவின்றி வாழ்வதை அறிந்த ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு விஞ்ஞானிகளும் டாக்டர்களும் ஒரு சிறப்பு குழு மூலம் அவரை 2003 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் ஆராய்ச்சி செய்தனர். அந்த ஆராய்ச்சியின் முடிவில், அந்த சாமியார் உணவின்றி வாழ்வதற்கு ஓர் சிறப்பு உடற்பயிற்சி செய்து வருகிறார் என குறிப்பிட்டனர்.

சாது பிரகலாத் ஜனி சாமியார் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால், சொந்த ஊருக்கு சென்ற அவர் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது அடக்கம் இவர் வாழ்ந்து வந்த ஆசிரமத்தில் நடைபெறும் என சாமியாரின் சீடர்கள் தெரிவித்துள்ளனர்.   

 

Published by
மணிகண்டன்

Recent Posts

INDvBAN : நான் ‘கில்’லி டா! சதம் விளாசிய கில்! இந்தியா அசத்தல் வெற்றி!  

INDvBAN : நான் ‘கில்’லி டா! சதம் விளாசிய கில்! இந்தியா அசத்தல் வெற்றி!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில்…

4 hours ago

“CBSE பள்ளி இடம் எங்களுடையது தான்., ஆனால்?” அண்ணாமலைக்கு விளக்கம் கொடுத்த திருமா!

சென்னை : மும்மொழி கொள்கை பற்றிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகி உள்ள நிலையில், பாஜக மாநில…

6 hours ago

பனாமா ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்ட இந்தியர்கள்! தூதரகம் அளித்த புதிய தகவல்.!

பனாமா : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஜன்னல்…

7 hours ago

INDvBAN : ஆட்டம் காட்டிய இந்திய பவுலர்கள்.., நிலைத்து ஆடிய வங்கதேச வீரர்கள்! 229 டார்கெட்!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் …

8 hours ago

மீனவர் பிரச்னை: “நிரந்தர தீர்வு வேண்டும்” – முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல்…

8 hours ago

அஞ்சலை அம்மாள் நினைவு நாள்: ‘பெண்கள் பாதுகாப்பை மீட்டெடுக்க உறுதி ஏற்போம்’ – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கடந்த பிப்., 2ம் தேதி சென்னை  பனையூரில்…

9 hours ago