நடிகை ரியா சக்கரபோர்த்தி போதைப்பொருட்கள் வாங்கினார் எனவும், அவர் அதனை உட்கொள்ளவில்லை என நடிகர் டாப்ஸீ தெரிவித்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் திடீர் திருப்பமாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அவரின் காதலியான ரியாவின் தம்பி சோவிக் மற்றும் சாமுவேல் மிரண்டாவீடுகளில் சோதனை நடைபெற்ற பின்னர், இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இருவரையும் வருகின்ற 9 -ம் தேதி வரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் காலை ரியா வீட்டிற்கு சென்று நேரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கினர்.
பின்னர், மதியம் 12 மணியளவில் ரியா போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அங்கு அவரிடம் 6 மணி விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, ரியா மீண்டும் ஆஜராக போதைப்பொருள் தடுப்பு பிரிவு நேற்று சமன் அனுப்பியது. இதனால், ரியா சக்கரபோர்த்தி கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலிஸாரால் நடிகை ரியா சக்கரபோர்த்தி கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில், நடிகர் ரியா சக்கரபோர்த்தி போதைப்பொருட்கள் வாங்கியுள்ளதாகவும், அதனை உட்கொள்ளவில்லை என நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து என்.டி.டி.வி. செய்தியை ரி-ட்வீட் செய்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர், ரியா போதைப்பொருள் உட்கொள்ளவில்லை எனவும், அது சுஷாந்திற்காக வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், நடிகர் சுஷாந்த் உயிரோடு இருந்தால், அவரையும் கைது செய்திருப்பார்கள். மேலும், சுஷாந்த்தை போதைப்பொருள் எதுக்கு ரியா வலியுறுத்தியிருக்கலாம் அல்லது வாங்கித்தரச்சொல்லி ரியாவை சுஷாந்த் வலியுறுத்தி இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…