சுஷாந்த் சிங் மரண வழக்கு..ரியா சக்ரபோர்த்தி நேரில் ஆஜர்.!

Published by
murugan

கடந்த ஜூன் 14 ம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் சிங்கின் மரணத்தில், அவரது காதலி ரியாவுக்கு தொடர்பு இருப்பதாக பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜு நகர் காவல் நிலையத்தில் சுஷாந்த் சிங்கின்  தந்தை புகார் கொடுத்தார்.

அந்த புகாரில், சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியது, பணமோசடியில் ஈடுபட்டது என பல்வேறு குற்றசாட்டுகளை தெரிவித்தார். அந்த புகாரின் அடிபடையில், ராஜு நகர் போலீசார் ரியா உள்ளிட்ட 6 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

பணமோசடியில் ஈடுபட்டதாக புகார் கொடுக்கப்பட்டதால்  அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இதைதொடந்து, ரியா சக்ரபோர்த்தி நேரில் ஆஜராக பதில் அளிக்கவேண்டும் என அமலாக்கத்துறை நோட்டிஸ் அனுப்பியது.

இந்நிலையில், சுஷாந்த் சிங்ராஜ் மரண வழக்கு தொடர்பாக வழக்கின் விசாரணைக்காக மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ரியா சக்ரபர்தி நேரில் ஆஜர் ஆனார். பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ரியா சக்ரபோர்த்திடம் கேள்வி கேட்கப்பட்டு பதிவு செய்யப்படும் என அமலாக்கத்துறை தெரிவித்தது.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

11 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

11 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

11 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago