கடந்த ஜூன் 14 ம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் சிங்கின் மரணத்தில், அவரது காதலி ரியாவுக்கு தொடர்பு இருப்பதாக பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜு நகர் காவல் நிலையத்தில் சுஷாந்த் சிங்கின் தந்தை புகார் கொடுத்தார்.
அந்த புகாரில், சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியது, பணமோசடியில் ஈடுபட்டது என பல்வேறு குற்றசாட்டுகளை தெரிவித்தார். அந்த புகாரின் அடிபடையில், ராஜு நகர் போலீசார் ரியா உள்ளிட்ட 6 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
பணமோசடியில் ஈடுபட்டதாக புகார் கொடுக்கப்பட்டதால் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இதைதொடந்து, ரியா சக்ரபோர்த்தி நேரில் ஆஜராக பதில் அளிக்கவேண்டும் என அமலாக்கத்துறை நோட்டிஸ் அனுப்பியது.
இந்நிலையில், சுஷாந்த் சிங்ராஜ் மரண வழக்கு தொடர்பாக வழக்கின் விசாரணைக்காக மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ரியா சக்ரபர்தி நேரில் ஆஜர் ஆனார். பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ரியா சக்ரபோர்த்திடம் கேள்வி கேட்கப்பட்டு பதிவு செய்யப்படும் என அமலாக்கத்துறை தெரிவித்தது.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…