வாக்காளர்களை மதிக்க வேண்டும் – காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல்!

Default Image

கேரள மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுலின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தான் 15 ஆண்டுகள் வடமாநிலத்தில் எம்பியாக இருந்துள்ளதாகவும், அங்கு வித்தியாசமான அரசியல் உள்ளது. ஆனால் கேரளாவிற்கு வரும்போது, தான் புதுமையாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இங்குள்ள மக்கள் எந்த ஒரு பிரச்சனையையும் மிக ஆழமாக பார்க்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இவரது பேச்சுக்கு பாஜக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கபில் சிபல் அவர்கள் தெரிவிக்கையில், வாக்காளர்கள் அனைவரையும் மதிக்க வேண்டும். ஏன் என்றால் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்பவர்கள் வாக்காளர்கள் தான். நான் வட மாநில எம்பியாக இருந்தேன் என்பதை குறித்து ராகுல் கூறியதைப் பற்றி ராகுலிடம் தான் கேட்கவேண்டும், எந்த சூழ்நிலையில் அவர் அப்படிக் கூறினார் என தெரியவில்லை எனவும் ராகுலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Anbumani Ramadoss - Dr Ramadoss
RCB - IPL 2025
mk stalin
dominicanRepublic
Good Bad Ugly Review
PMK Leader Dr Ramadoss - Anbumani Ramadoss