பிரதமர் மோடியை மிகவும் மதிக்கிறேன் என்று முன்னாள் வங்காள முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மைத்துனி தெரிவித்துள்ளார்.
இரா பாசு தெரிவித்துள்ளதாவது, பிரதமர் நரேந்திர மோடியின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் ஊழலில் ஈடுபடுவதாக நான் நினைக்கவில்லை. இவ்வாறு முன்னாள் வங்காள முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மைத்துனி இரா பாசு கூறியுள்ளார்.
மேலும் கூறிய இரா பாசு, பிரதமர் மோடி நல்ல வேலை செய்து வருகிறார். விவசாயிகளால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றாலும், குறிப்பாக ரயில்வே துறையில் அவர் நல்ல வேலை செய்கிறார், என்று அவர் கூறினார்.
சமீபத்தில் மேற்கு வங்க மாநில முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் மனைவியின் சகோதரி இரா பாசு,நரை முடியுடன் மெல்லிய,அழுக்கான நீல நிற நைட்டியுடன் மேற்கு வங்கத்தின் பராபஜார் பகுதியில் உள்ள டன்லோப்பின் தெருக்களில் சுற்றித் திரிவது கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
10 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு வங்காள அரசாங்கத்தை நடத்திய இரா பாசு அவர்கள் வாழ்க்கை அறிவியல் ஆசிரியையாகவும் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள பிரியநாத் பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் 34 வருடங்கள் பணியாற்றியவர்.முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், கடந்த 2009 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு பாரா நகரில் வசித்து வந்தார். பிறகு கர்டா அருகில் உள்ள லிச்சு பகன் என்ற இடத்தில் வசித்து வந்தார்.
அதன்பின்னர், அவர் என்ன ஆனார் என்று தெரியாத நிலையில், தற்போது,டன்லப் பகுதியில், சாலையோரத்தில் வசித்து வருவது தெரிய வந்துள்ளது. இரா பாசு அவர்கள் சாலையோரத்தில் வசிப்பது பற்றிய செய்தி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவரை மாவட்ட நிர்வாகம் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தது. இதன் பின்பு இவர் தற்போதுள்ள நிலைமை இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…
பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு அவர்களுக்கு…