வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டியை 0.35% குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இன்று ரிசர்வ் வங்கி 2019-2020-ம் ஆண்டுக்கான 3-வது நிதிக் கொள்கையை அறிவித்தது.ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில்,வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டியை 0.35% குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதனால் ரெப்போ வட்டி விகிதம் 5.75% லிருந்து 5.40% ஆக குறைகிறது. மேலும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 5.50 % இருந்து 5.15 %-ஆக குறைக்கப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கை 7 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
தொடர்ந்து நான்காவது முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.இதனால் வீட்டுக்கடன் மற்றும் வாகனக்கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது.வட்டி விகிதம் தொடர்ந்து குறைக்கப்படுவதால் வங்கிகளும் கடன் விகிதத்தை குறைக்க வாய்ப்பு உள்ளது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…