Categories: இந்தியா

அரசு வேலைகளில் 3-ஆம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு தேவை- முதல் திருநங்கை நீதிபதி ஜோயிதா மோண்டல்

Published by
Muthu Kumar

அரசு வேலைகளில் 3-ஆம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு தேவை என்று இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி ஜோயிதா மொண்டல் கூறியுள்ளார்.

இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி ஜோயிதா மொண்டல் , தனது சமூக உறுப்பினர்களுக்கு அரசு வேலைகளில் இடஒதுக்கீடு தேவை என்று கூறியிருக்கிறார். மொண்டல் தனது சமூகத்திற்கும் நாட்டில் போதுமான எண்ணிக்கையில் தங்குமிடங்கள் தேவை என்றும், இது தொடர்பாக அரசாங்கம் ஒரு திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்குவது மிகவும் முக்கியம். எனக்கு வேலை இல்லை என்றால், எனக்கு யார் உணவளிப்பார்கள். அவர்கள் காவல்துறை மற்றும் ரயில்வே போன்ற பிரிவுகளில் நுழைவது, 3-ஆம் பாலினத்தவர் மீதான சமூகத்தின் பார்வையை மாற்றும் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு உதவும் என்று கூறினார்.

மொண்டல், 2017 இல் மேற்கு வங்காளத்தில் உள்ள இஸ்லாம்பூரின் லோக் அதாலத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார், இந்தியாவில் அத்தகைய பதவியை வகித்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். 2018 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடைபெற்ற லோக் அதாலத்தில் திருநங்கை ஆர்வலர் வித்யா காம்ப்ளே, உறுப்பினர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

மூன்றாவதாக கவுகாத்தியைச்சேர்ந்த ஸ்வாதி பிதான் பருவா என்ற திருநங்கை நீதிபதியாகப் பதவியேற்றார். கடந்த வாரம், ஒரு முக்கிய முடிவில், மகாராஷ்டிரா அரசு பம்பாய் உயர் நீதிமன்றத்தில் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் போலீஸ் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

11 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

24 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

35 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

42 mins ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

57 mins ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

2 hours ago