ஊரடங்கை நீடிக்க வேண்டும் என்று அசாம் மாநிலம் அரசு மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக பரவி நாடு முழுவதும் வைரஸின் தீவிரம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் 3 கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டின் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் 3 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 17 ஆம் திதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றும் போது நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், பிரதமர் மோடி கொரோனா குறித்தும், ஊரடங்கு நீடிப்பதா, தளர்வு செய்யப்படுவதா என்பதை பற்றியும் அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் சில மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், ஊரடங்கை நீடிக்க வேண்டும் என்று அசாம் மாநிலம் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. அதில், பொதுமுடக்கத்தை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க கோரி மத்திய அரசுக்கு அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…