ரெப்போ வட்டி விகிதம் 4.40 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் அறிவித்தார்.
கொரோனா வைரசால் இழந்த இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து 5 கட்டமாக பொருளாதார திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, மும்பையில் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது , ரெப்போ வட்டி விகிதம் 4.40 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என அறிவித்தார். இந்த வட்டி குறைப்பால் வீடு மற்றும் வாகன கடன் மீதான வட்டி குறைய வாய்ப்பு உள்ளது. அத்துடன் வங்கிகள் தங்கள் பணத்தை ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும் போது அளிக்கப்படும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…
ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…