தங்க கடத்தல் தொடர்பாக கேரள முதல்வரின் முதன்மை செயலர் நீக்கம்

Published by
Venu

தங்கம் கடத்தல் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலர் எம். சிவசங்கர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு பார்சல் வந்துள்ளது.எனவே தூதரக முகவரியை வைத்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு செய்தி  வந்தது.இதனையடுத்து சுங்கத்துறை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று திருவனந்தபுரத்தில் உள்ள  ஐக்கிய அரபு அமீரகதூதரகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள  பார்சல்களை ஆய்வு செய்த போது சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் இருந்துள்ளது.

இந்த பார்சலை எடுக்க வந்த சரித் என்பவரும் கைது செய்யப்பட்டார்.இந்த கடத்தலில் கேரள தகவல் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும்  ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.இதனால் மக்கள் தொடர்பு அலுவலராக தூதரகத்தில்  பணியாற்றிய சரித் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வப்னா என்பவரும் தூதரகத்தில் நிர்வாகச் செயலாளராக பணிபுரிந்து பின்னர் பதவியை விட்டு விலகியதும் விசாரணையில் தெரியவந்தது.  ஸ்வப்னா கேரள அரசின் முதன்மை செயலர் மற்றும்  தகவல் தொடர்பு துறைக்கும் செயலர் சிவசங்கருக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டது. எனவே இவரிடமும் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்  எம்.சிவசங்கரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Venu
Tags: #KeralaGold

Recent Posts

என்னை பற்றி தெரிஞ்சும் ராஜஸ்தான் செஞ்சது ஆச்சரியம்! மிட்செல் ஸ்டார்க் பேச்சு!

என்னை பற்றி தெரிஞ்சும் ராஜஸ்தான் செஞ்சது ஆச்சரியம்! மிட்செல் ஸ்டார்க் பேச்சு!

டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…

57 minutes ago

வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…

2 hours ago

Live : தமிழக அரசியல் நகர்வுகள் முதல்.. சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…

2 hours ago

பிரியாணி, குவார்ட்டர் கொடுத்துட்டு மேல கை வைங்க! போலீசிடம் உத்தரவு போட்ட குற்றவாளி!

கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…

2 hours ago

அமெரிக்கா விதித்த 245% வரி., சீனாவின் ரியாக்சன் என்ன?

சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…

2 hours ago

ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!

விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…

3 hours ago